அய்யனாரு சாவதில்லை


முட்ட வந்த கெடாவ
எட்டி உதைக்கப் போன என்னைய
தடுத்துவிட்டு
ஆத்தா சொல்லுச்சி
"கூடாதய்யா அது ஐய்யனாரு"

கூழு ஊத்தின நாளப்போ
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி

"ஆத்தா ஐய்யனாரு
செத்துப் போச்சுன்னேன்"

"இல்ல மவராசா
அந்தா பாரு"ன்னு
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா
கைய நீட்டிச்சி என் ஆத்தா

-கண்ணன்