வனதேவதை


பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்

தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு

ரகசியமாய் வெடித்துப் பரவி

ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு

ஏகாந்தமாய் அதிகாலை

உடலையே விரித்துப்போட்டு

ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே

குழறி எழும் பறவைகளும் காண்பேன்

கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”

இரவின் மாயை

முதுமையிலும் புணரும் இச்சையில்

புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்

என் புதருக்குள் நுழைந்தவனை

மீளவிடேன்

ஆணுறுப்பு மலையருவி

சொரிந்து நிறையவும் வழி தருவேன்

வனதேவதைக்குப் புருஷனில்லை

புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு

உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி

நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு


-குட்டி ரேவதி

ஆகச் சிறந்த புணர்வு











ஆண் கடவுளின் சிறுநீர்


ஆண் கடவுளின் சிறுநீர்
மாதவிடாய் நாப்சின் இறுக்கத்தோடு

நடனமாடிய குலுக்கு நடிகையின்

தொப்புள்கண்திரைவிழியில் விரிய

வீரியமான குறி, குளமான நண்பனுக்கு

நடிகைகள் மலங்கழிப்பதைத்

தோன்றாமல் செய்யயோசனையில்

அவன் நடந்து செல்லும்போது

காக்கை எச்சமிட்டார் ஆண் கடவுள்

காக்கை எச்சம்நடிகை மலங்கழிக்கும்

அறையின்லோஷன் மணமாயிற்று.

திருப்தியோடு லோஷன்

மணவறைநீங்கிய கடவுள்தேசிய

நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று

மாதவிடாய்ப் புணர்ச்சி

ஆதாரப் புத்தகத்தைப்

படித்தவாறு நிமிர்ந்தார்

கேன்வாஸில் குலுக்குத் தொப்புள்

கடவுளுக்கு மலம் முட்டியது.

விளம்பரத்தட்டியின் உயர

நடுமத்தியில்அவர் மற்றொரு

காகமென எச்சமிட்டுச்சென்றதைப்

பார்த்த சாத்தான்சப்தமிட்ட

சிரிப்பில்சிக்னலில்

இருசக்கர வாகன விபத்தில்

இருவர் தலை நசுங்கிமரித்தனர்.

பூணூல் பார்ப்பான்சகுனம்

கரடு முரடாவதைக் காண

கடவுளின் சிறுநீரெனப்

பெருக்கெடுத்தோடியதுமூளை

நசுங்கி வெளியேறிய

மாதவிடாய் ரெத்தம்.

கேள்வி


மதுரை எரிகிறது.

மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யோசித்தாள்.
சிலையாய்.
கடல் காற்றில்
பறந்தது காகிதம்.
சிலம்பில் சிக்கியது
நெ. கொடுத்த முடிவுகள்
முத்துக்கள்.
மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யாசித்தாள்.
இளம் கோ விடம்.
அய்யோநீ எழுதாமல்
விட்டதால்அவர்கள்
புரியாமல் போனதால்
நான் வெறும் கல் பூ
ஆனேனடா கவி
இறந்தவர்கள் யார்
இளம் கோ?
இரண்டு பூவை
சூடிக்கொண்டவன்
ஏற்றினான் என்னை.
கல் பூஆக்கினான்
என்னை.
மதுரை எரிகிறது
இறந்தவர்கள்
யார் இளம் கோ?

மதுராவின் வலையில் இருந்து

நம்பிக்கைப் பிரதிகள்


எங்கள் வீட்டு மொட்டை மாடி
பிரம்புச் சாய்வு நாற்காலி
கருத்த வானம் நிலவொளி
சாலை ஓரத்து இளவட்டங்களாய்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
திண்ணை தூண் முற்றம்
என்றிருந்த எதிர் வீடு
இன்று இரும்புக் கம்பிகளாய்
வான்நோக்கி வளர்ந்தபடி,
காலம் காலமாய் உலகில்
எத்தனை மாற்றங்கள்!
வானத்து மேகத் திட்டுக்கள் போல்
பனி பூத்த உலகம்
இயற்கையோடு முரண்படாத மனிதன்
முதல் காமம் தணித்துச்சொன்னான்
‘கடவுளின்முதல் பாவம்-பெண்’
நூற்றாண்டுகள் ஓடினபூமியில்
கீறல்கள்என்மீது வடுக்கள்.
பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோயில்களில் விக்கிரங்களாக்கப்பட்டேன்
எனக்காகப் போர் தொடுத்தார்கள்
கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்
காவியம் படைத்தார்கள்
உடமையாய் உரியவளாய்
உயிரற்ற ஜடப்பொருளாய் ஆகிப்போனேன்.
வாழ்க்கையோ உலைக்களம்
பாதையெங்கும் சிதைகள்
ஆங்காங்கே பெண் மாயை
ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்
முன் அறையில் எனது முதல்
சுயம்வரப் படலம்பற்றிய பேச்சுவார்த்தைகள்
மனம் பாடியது- சிலிர்த்துச்சிறகு
விரிக்கும் பட்டுப் பூச்சிகள்என்னுள்
நாளை பற்றியநம்பிக்கைக்
கனாக்கள் இன்னும் விரல் பற்றும்
குழந்தைகளாய் நாங்கள்.
-கனிமொழி

FEB 14