பொடியன்

நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
நான் இந்த சாதியென்று
நீ சொல்லும் வேளையில்
சொல்லாமல் தெரியும் உன்
சாதியும்அதிலிருக்கும்
ஆணவமும் வெட்டிய
மரங்களும்மனிதமும்
ஒன்றாய் கணக்கெடுக்கும்
கோமானே
யாம்
நட்ட மரங்களை எண்ணிப்பார்
அதுசொல்லும்
எந்தன் உயிர்ப்பை
தமிழும் தமிழனும் திராவிடமும்
வேறு வேறென்றுபுலம்மும்
உன்போன்ற சில ....
அதுவல்ல என்வேலை
எனக்குண்டு ஆயிரம் பணிகள்
அதில் கொஞ்சமேனும்
சிந்திக்கஒதுக்குவதுண்டு
எதையும் உம்போல்
பிடுங்கவல்ல
எழுதியது என்னவென்று
விளங்காவிடின்முதலில்படி
அதைப் புரியவும் கற்றுக்கொள்
நான் பொடியன் என்றுஎனக்கும்
நினைவூட்டிய உன்அன்புக்கு
நன்றி
கொலையென்ன அதன்
விலையென்ன வென்று
எமக்கும் தெரியும்
எம் இனத்தைவிட
எவனோ பெரியவன் என
பிதற்றும் உனக்குகாலம்
பதில் சொல்லும்
ஆனால் கடினமாய்
எனை எதிர்க்க வேண்டுமெனில்
எழுதெனக்கு இனமிழுத்து
எழுதுவது எரியும்
நெருப்பு
எழுதுகிறேன் பின்னால்

இன்று எங்களின் திருமண நாள்

இக் கவிதை என் மனைவிக்கு
இன்று எங்களின் திருமண நாள்
05-07- 2002
இதே போலொறு நாளில் தான் என் + என் திருமணம் நிகழ்ந்தேரியது இது நான்காம் வருடம்

இன்னும்
எத்தனை காலம்
உன்னுடன் உன்னில்
கலைந்து கரைந்து
கிடக்கப் போகிறேன்
என்பதறியேன்
ஆனால்
உனை பிரிந்த
இந்த
சிறு இடைவெளி என் உன்
இடையே இன்னும்
நெருக்கம் தருவது நிஜம்
இன்னும் சில காலம்
நீயில்லாமல் நானும்
நானில்லாமல் நீயும்
தனித்தனியே திருமணவிழாவை
கொண்டாடக் கடவது
அப்போதாவது இன்னும்
நெருங்குவோம்
மனசால்


வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் நன்றிகள் பல