ப்ரிய மோகன்
ப்ரிய மோகன்,
நான் உங்களுக்குக் கடிதம்
எழுதுவேன் என்று
எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.
உங்களைக் கடும் விமரிசனம் செய்து
கிண்டலடித்த கூட்டத்தைச்
சேர்ந்தவன் நான்.
இருப்பினும்
நேசக்கரம் நீட்டுவீரெனத்
தெரியும் எனக்கு.
இந்தக் கடிதம்கூட
எழுதியிருக்க மாட்டேன்.
சந்தித்து மன்னிப்புக் கேட்கலாமென்றால்,
உம்மைச் சுற்றியுள்ள
கமாண்டோ படை
தடையாக இருக்கிறது.
எங்காவது பொதுக் கூட்டத்தில்
உம்மைக் கண்ணில் பார்த்துக்
கையசைத்து,
என்னை மறு அறிமுகம்
செய்துகொள்ளலாம் என்றால்
அதற்கும் வழியில்லை.
நீர் என்னைப் பார்க்கிறீரா
இல்லையா
என்று தெரியாத அளவுக்கு
உம் தலையைச் சுற்றி
சூரிய வட்ட ஒளித்தட்டு
ஒன்றைப் பிடித்தபடி
அலைகிறார்கள் உங்கள் பக்தர்கள்.
உங்கள் காதி கமாண்டோக்கள்
இல்லாமல்,
சூரிய வட்டமில்லாமல்,
பழையபடி மகா மனிதனாக
உம்மைச் சந்திக்க வேண்டும்...
எப்படி? தெரியவில்லை.
என்னடா...
இந்தப் பயல் இப்படி ஒரு
விண்ணப்பம் வைக்கிறானே
என்று வியக்காதீர்கள்.
அன்று நான்
உங்களைச் சுட்டது
விவேகமில்லாத கோபத்தில்.
இன்று கோபம் தணிந்து
கை குலுக்க வருகிறேன்.
மறுதலிக்க வேண்டாம்!
உங்கள் நண்பன்
கமல்ஹாசன்.
Posted by Unknown at 17 comments
Labels: கமல்ஹாசன்
சயனைடு கவிதை
வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.
எரிக்கப்பட்ட கூட்டிலிருந்து
இரை தேடி வரும் ரணம் பூசிய
சிறகுகள்.
பனை மரங்கள்
துப்பாக்கிகளாய் வெடிக்க
தேயிலை புகையிலையாய் கசியும்.
சமாதானப் புறாவின்
சவத்தில்
சிவப்புக் கொடி.
கிரிக்கெட் ஆட்டம் நின்றுபோனால்
இன்னொரு நாள்
வைத்துக்கொள்ளலாம்.
கோயிலுக்குள் குண்டு வெடித்தால்
இன்னொரு கடவுள் சிலையை
வாங்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையில் குண்டு வெடித்தால்
எப்படி முளைக்கவைப்பது
இன்னொரு சீருடைச் செடியை?
ஊரே அழுகிறது
எதற்கு ஊரடங்கு?
ஒரு துளி நிலத்தில்
கடலளவு கல்லறைகள்.
மண்டை ஓடுகள்
எல்லைக் கோட்டை அழிக்கட்டும்.
பிணங்களின் கனவுமெய்ப்பட வேண்டும்.
ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய
தமிழர்கள்
தாய் மண்ணுக்குத் திரும்பும்போது
தேசியகீதம்தாய் மொழியாகட்டும்.
ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது
Posted by Unknown at 6 comments
மீண்டும் உனக்கொரு கடிதம்.
சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.
பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை.
ஆள் மாறினாலும்இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று.
பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதைஉணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன் ஆதலால்
காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்
விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
-கமல்ஹாசன்
Posted by Unknown at 2 comments
Labels: கமல்ஹாசன்
நாபிக்கொடி
அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி
சோதரி பல்முகி பாதகி
-கமல்ஹாசன்
Posted by Unknown at 12 comments
Labels: கமல்ஹாசன்
KAMAL HASSAN
உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,
விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.
நன்றி- கமல்ஹாசன் - ஆனந்த விகடன்
Posted by Unknown at 48 comments
Labels: கமல்ஹாசன்
இது கதையல்ல
ரெண்டு பேருமே டாக்டர் ஆவறதே எங்களோட லட்சியம்னு படிச்சி என்ட்ரன்ஸ் மார்க் எடுத்து எப்படியோ காசையும் கொஞ்சம் குடுத்து மெடிக்கல் காலேசில சீட்ட வாங்கி போட்டாங்க ஆனாலும் அவங்க கொஞ்சம் துனிச்சலான பொண்ணுங்கதான். தனியா வீடு எடுத்து அங்கன போக வர காலேசிக்கு ஒரு கைனடிக் ஓன்டாவும் அவங்க அம்மா வாங்கி தந்துட்டாங்க (பாவம் அவங்க அப்பா சின்ன புள்ளையா இருக்கும் போதே போய்சேந்துட்டாராம்)
நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த இங்கிலிபீசு பாட்டுலாம் கொஞ்சம் கொஞ்சம் கேப்பனுங்க. அதை ஒரு நா ஆரும் ஊட்டுல இல்லாதப்ப நல்ல சத்தமா வச்சி, நம்ம பின்னால தெரு பசங்கதான் கீழவா கீழவான்னு பாடிக்கிட்டிருந்தாங்க. திடீர்னு கதவ தட்டுற சத்தம் கேட்டதுங்க என்னடா இது சத்தமுன்னு கதவ தொறந்தா அவங்க நின்னுகிட்டு இருக்காங்க . நம்ம வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் நடுவில ஒரு சின்ன இடைவெளிதான் லிப்டுக்கு அதனால அவங்களுக்கு சங்கடம் போல நம்ம இனிமே சத்தமா பாட்டு போடக்கூடாதுன்னு என்ன? ங்கன்ற மாதிரிபாத்தனுங்க. அவங்க எக்ஸ்யூஸ்மி அந்த பாட்ட கொஞ்சம் சத்தமா வக்க முடியுமான்னு கேட்டாங்க.... நீங்களே சொல்லுங்க புலின்னு நெனைசு எட்ட போனா ஒரு பூவால்ல இருக்கு .
சரிங்கன்னு சொல்லிட்டு நான் போயி அந்த பொட்டீல எம்புட்டு வக்க முடியுமோ அம்புட்டு சத்தம் வச்சனுங்க.. அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் கதவை சாத்திகிட்டு ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க போனா திருப்பி டம்மு டம்முன்னு சத்தம் அவங்கதான் மறுபடியும் வந்து என்னங்க உங்க அக்காதான் ஊருக்கு போயிட்டாங்களே எங்க சாப்பிடுவீங்கன்னு கேட்டாங்க, நான் கடையில சேலம் ஆர் ஆர் என்வி ல சாப்பிடுவேன் இல்லன்னா அங்கன பக்கத்தில ஒரு சரவணபவன் இருக்கில அதுல சாப்பிடுவேன்ன்னு சொன்னனா அதெல்லாம் வேண்டாம்ங்க உங்க அக்கா வற்ற வரைக்கும் நீங்க இங்கயே சாப்பிடலாம் ஒன்னும் கூச்சப் பட வேண்டாம்னு சொன்னாங்க.
நானும் ஒரு தயக்கத்தோட சரிங்கன்னு சொல்லிட்டு வரங்க நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன். ஒரு நல்ல பாட்ட எடுத்து சத்தமா வச்சிட்டு போயி சாப்பிடப் போனா அங்க அவங்க பிரண்டும் இருந்தாங்க.
இன்னமும் ரெடிபன்னலியேன்னு சொன்னாங்க. ஆகா இன்னைக்கு நாம தான் சமைக்கனுமா இல்லை வெறுந் தண்ணிதானானு நெனைச்சி ஒரு ஓரமா கெடந்த சேரத் தூக்கி போட்டு ஒக்காரப் போனனுங்க. அதுக்கு கயல் அவர வேனும்னா போயிட்டு அப்புறமா அழைச்சிட்டு வாயேன் நான் அதுக்குள்ள சமையல
ரெடிபன்னி வக்கிறேன்னு சொல்லுச்சிங்க. நானும் இதுக்கு மேல இருந்தா அந்த புள்ள நம்மல ஜன்னல் வழியா தூக்கி பஸ்டாண்டு பணிமனைல போட்டுடும் போல கெளம்பி நாம கடைல சாப்பிட்டுக்கலாம்ம்னு போனேன். அங்க போனா சேலம், சரவணா எல்லாம் கூட்டம், சரின்னு ஒரு 100 ரூபா காசிருந்துது ஒரு பீர் சாப்பிட்டு அப்புறமா சாப்பிடலாமுன்னு ஏவிஎம் உருண்டைக்கு
நேரா ஒரு ஒயின்சாப்பும் ஒரு பரோட்டாகடையும் இருக்கு அதுல போயி உக்காந்து ஒரு பீர் ஆர்டர் பன்னுனனுங்க.
கதவதொறந்து உள்ள போனா அதுங்க வந்து கொஞ்சமா சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
ஒருநாளு காலையில வந்து கதவ தட்டி ஒனக்கு ஊரில எதும் பொண்ணு பாத்து வச்சிருக்காங்களான்னு சசி கேட்டுது. இதென்னடா எதோ நானா போயிட்டுருக்கவனை கூப்பிட்டு
தானா கேட்டா என்ன சொல்ல இல்லிங்கன்னு ஒரு பொய்ய சொன்னதுக்கு சரிங்கன்னு போச்சுது சசி.
நமக்கு யாருன்னுதான் ஊருக்கே தெரியுமே இவங்கள்ட பொய் சொன்னா தப்பில்லேன்னு சமாதனமாயி கண்டுக்காம விட்டாச்சு. நாங்க அதுக்குள்ள நல்லா பிரண்டாயிட்டோம். மொத மொதலா அப்ப நம்ம ஜான் டிரவோல்டா நடிச்ச ப்ரோகன் ஏரோ ராஜேஸ்வரில ஓடுச்சு அதப் பாக்க மூனு பேரும் போனமா. அங்க வச்சு கயல் சொல்லுச்சு எங்க வீட்டில மாப்பிள பாக்கறாங்கன்னு ஆகா நமகு இது ஏதோ ஆகாத விசயமாச்சேன்னு சரிங்க நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்டதுக்கு நான் என்ன சொல்ல எல்லாம் அம்மாவோட முடிவுன்னு சொல்லிட்டு அதுக்கு நீங்க என்னய பொன்னு கேப்பீங்களான்னு கேட்டுது. இதையெல்லாம் பக்கத்துல ஒக்காந்து கேட்ட சசி ஒரே சிரிப்பா சிரிக்குது. எல்லா பயலும் அன்னைக்கு எங்களைத்தான் பாத்தான் .
சரி எதுவா இருந்தாலும் வீட்டுல போயி பேசிக்கலம்னு சொல்லிட்டு படத்த பாத்தா அது ஒன்னும் தெரியலை எம் பொண்டாட்டி ஞாபகம்தான் வருது. அடியே முதல்லயே கயலுகிட்ட எல்லாத்தையும் சொல்லிருந்தா இம்மாதூரம் ஆகாதேன்னு வருத்தத்தோட படம் முடிஞ்சு வெளிய வந்தா சசி இன்ன்மும் சிரிக்குது. என்னடா ஆச்சு இந்த புள்ளைக்குன்னு நானும் பல குழப்பத்தோட வீட்டுக்கு வந்தோம்.
அவங்கள பத்தி எங்காளுகிட்டயும் நான் சொன்னதுக்கு அப்பிடி ஏதும் ஆசையிருந்தா அவங்கள்யே கட்டிக்கோங்க நான் கண்டுக்காம உங்கள மாதிரி ஒரு இளிச்ச வாயன் கிடைச்சா
கட்டிக்கிறேன்னு சொல்லுது. கயல் கல்லதூக்கி போட்டுதுன்னா எங்காளு அனுகுண்டே போடுது.
மத்தளம் என்ன மத்தளம் அதுக்கு பேரை எம்பேரா வைக்கலாம். ஆனாலும் எனக்கு மனசு கேக்காம எந்த முடிவும் எடுக்கலை. சரின்னு இருக்கும் போது ஒருநா அவங்க வண்டி ரிப்பேரு
நான் மாமாவோட வண்டிய எடுத்துகிட்டு வெளிய போறதுக்கு கிளம்பினேன் அவங்க வந்து இதப் பாத்து சரிபன்னிக் கொடுங்க மெக்கானிக்குனு நக்கலா சொன்னாங்க.
நாலு நாளைக்குள்ள அப்ப்டி என்ன நட்போ. சரின்னு சென்னை வந்ததும் அவங்க இயல்பா ஆயிட்டாங்க .... நானும்தான் அதுக்கப்புறம் ஆச்சு 2 வருஷம் நான் ஊருக்கு வந்து அவங்க
ரெண்டுபேரை கொன்னு டாக்டராயி, எங்கல்யாணத்துக்கு கூப்பிடப் போனப்போ அவங்க கல்யாணம் முடிஞ்சு போயிருந்துது.
என்னான்னு கேட்டதுக்கு ஓட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலையாம். அட எல்லா கதயும் சொல்லியாச்சான்னு கேட்டதுக்கு இந்த கதைய சொல்லித்தான் லவ்வே ஆச்சுன்னார். எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் ஒரு வாரத்துக்கு முன்னமே வந்தாங்க எல்லா வேலையும் எடுத்து செஞ்சாங்க, அதுக்கு பிறகு அவங்க வீடுக்கு தான் முதல் தேவைக்கே போனோம்.
அவங்களுக்கு இப்ப ஒரு பொண்ணு இருக்கு .. இந்த சொந்தம் எனக்கு இன்னும் புடிச்சிருக்கு கல்யாணம் பன்னீருந்தா கூட இப்படி நட்போட இருந்திருப்பாமான்னு தெரியலை. அவரும் ரொம்ப நல்லவர்.
எந்த தப்பான என்ணமும் இல்லாம பேசுவாரு இன்னமும் நான் போன் பன்னலைன்னா கூட அவரு போனடிச்சு எப்ப ஊருக்குன்னு கேப்பாரு.
(இச் சம்பவம் நிறைய உண்மைகளும் கொஞ்சமாய் வார்த்தைகளும் கலந்தது 1996- 1999 + இன்று வரை)
Posted by Unknown at 42 comments
Labels: மகேந்திரன்.பெ
நாளை AUG-15 மற்றுமொறு நாளே
வழக்கம் போல
கோயிலுக்குள்
நுழைய முடியாத,
பொதுக் குளத்தில்,
நீரருந்த
பொது இடத்தில்
டீ குடிக்க
காலிலே செருப்பனிய
காதலில் சாதிபார்க்க
நீதியில் பூனூல் பார்க்க
எல்லா வழிகளிலும்
இருக்கும் ஓட்டைகளை
எது வழியே சென்றால்
தப்பிக்கலாம் எனத்
தெரியாத உனக்கும்...
இருப்பது சிலபேர்தான்
யாம் சொன்னதே சட்டமாகும்
அர்ச்சகர் யாமே அன்றோ
நீ அதுபுறம் தள்ளிப் போவீர்
எப்புறம் சென்றாலும்
யாம் இச்சைகள் தவிற்க மாட்டோம்
நீசனின் பாஷை பேசும்
நீபேசவோ சாதி பற்றி
ஈசனும் எங்கள் சொத்து
அதை பேசுவோம்
நாங்கள் மட்டும்
மனு நீதி மட்டும் போதும்
இபிகோ எதற்கு என்னும்
சில பேடிகள் இருக்கும்
மட்டும்
உனக்கு
நாளை
மற்றுமொரு நாளே
Posted by Unknown at 1 comments
Labels: மகேந்திரன்.பெ
கண்ணஞ்சல்
சொல்ல மறுக்கும் உன்சின்ன மவுனத்துக்கு நடுவில்
என் சிறு சிரிப்பை பலிகொண்டாய்
ஊடல் என்று ஒதுக்கவும் முடியாமல்
கோபம் என்று கோபிக்கவும் இயலாமல்
இரண்டுக்கும் நடுவில் என்னை
இம்சை செய்கிறாய்
மிகப் பிடிவாதமாய்.
உன் உள்ளே இருக்கும் ஒரு
கண(ன)ப் பார்வை என்னை
இன்னும் கொஞ்சம் லேசாக்குமென்றால்
இம் மவுனத்தை இப்படியே தொடர்க
இறுதியில் சொல்ல ஏதேனும் வழியிருந்தால்
எனக்கொரு கண்ணஞ்சல் அனுப்பு
Posted by Unknown at 7 comments
Labels: மகேந்திரன்.பெ
இரங்கற்பா
கருகிய அந்தமுகத்துக்கு
தெரியாது நான்
யாரென்று
கருகும் முன் நான்
பார்த்திருந்தாலும் அது
தெரிந்துகொண்டிருக்காது
என் எல்லா நாட்களைப் போல
இதுவும் ஒரு நாள்
இங்கே நான் எழுதுவது "அதைப்"பற்றி
என்றும் அறியாது
அதுவும் இதற்க்காகவே காத்திருக்கக் கூடும்
என்னைப் போல
என்றாவது ஒரு நாள்
எனக்கும் வரும்வேளை
அப்போது வேறு யாராவது
எழுதக்கடவது இதேபோல்
கருகிய சவக்களை வீசும்
என் முகத்தைபார்த்து
Posted by Unknown at 1 comments
நான் நீ
நீ
ஒவ்வொறு முறையும்
என் வீட்டைக் கடக்கையில்
எதையாவது
தொலைத்துவிட்டே
போகிறாயோ என்று
எனக்கு சந்தேகமாய்
இருக்கிறது
இல்லையென்றால்
என் தின்னையை கொஞ்சம்
திரும்பிப் பார்
தொலைத்த நான்
துவண்டு கிடப்பதை
Posted by Unknown at 8 comments
Labels: மகேந்திரன்.பெ
பொடியன்
நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
நான் இந்த சாதியென்று
நீ சொல்லும் வேளையில்
சொல்லாமல் தெரியும் உன்
சாதியும்அதிலிருக்கும்
ஆணவமும் வெட்டிய
மரங்களும்மனிதமும்
ஒன்றாய் கணக்கெடுக்கும்
கோமானே
யாம்
நட்ட மரங்களை எண்ணிப்பார்
அதுசொல்லும்
எந்தன் உயிர்ப்பை
தமிழும் தமிழனும் திராவிடமும்
வேறு வேறென்றுபுலம்மும்
உன்போன்ற சில ....
அதுவல்ல என்வேலை
எனக்குண்டு ஆயிரம் பணிகள்
அதில் கொஞ்சமேனும்
சிந்திக்கஒதுக்குவதுண்டு
எதையும் உம்போல்
பிடுங்கவல்ல
எழுதியது என்னவென்று
விளங்காவிடின்முதலில்படி
அதைப் புரியவும் கற்றுக்கொள்
நான் பொடியன் என்றுஎனக்கும்
நினைவூட்டிய உன்அன்புக்கு
நன்றி
கொலையென்ன அதன்
விலையென்ன வென்று
எமக்கும் தெரியும்
எம் இனத்தைவிட
எவனோ பெரியவன் என
பிதற்றும் உனக்குகாலம்
பதில் சொல்லும்
ஆனால் கடினமாய்
எனை எதிர்க்க வேண்டுமெனில்
எழுதெனக்கு இனமிழுத்து
எழுதுவது எரியும்
நெருப்பு
எழுதுகிறேன் பின்னால்
Posted by Unknown at 9 comments
Labels: மகேந்திரன்.பெ
இன்று எங்களின் திருமண நாள்
இக் கவிதை என் மனைவிக்கு
இன்று எங்களின் திருமண நாள்
05-07- 2002
இதே போலொறு நாளில் தான் என் + என் திருமணம் நிகழ்ந்தேரியது இது நான்காம் வருடம்
இன்னும்
எத்தனை காலம்
உன்னுடன் உன்னில்
கலைந்து கரைந்து
கிடக்கப் போகிறேன்
என்பதறியேன்
ஆனால்
உனை பிரிந்த
இந்த
சிறு இடைவெளி என் உன்
இடையே இன்னும்
நெருக்கம் தருவது நிஜம்
இன்னும் சில காலம்
நீயில்லாமல் நானும்
நானில்லாமல் நீயும்
தனித்தனியே திருமணவிழாவை
கொண்டாடக் கடவது
அப்போதாவது இன்னும்
நெருங்குவோம்
மனசால்
வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் நன்றிகள் பல
Posted by Unknown at 39 comments
Labels: மகேந்திரன்.பெ
கிழக்கிலும்
மேற்க்கிலும்
உதிக்கும் மறையும்
தினசரி உதயம்
தினசரி மறைவு
இது அதன்
இயல்பு
இருப்பை
கணிக்க இருக்கும்
எப்போதும்
இலைகள்
நடுவில் துளிர்ப்பதுண்டு
அவ்வப்போது
அதன் ஆயுள்
எதுவரை
அதுஅறியாது.
வீசும் காற்றிலும்
எரியும் நெருப்பிலும்
இருந்தது எங்கென
தெரியாது போகும்
ஆயினும்
மறுநாள் உதிக்கும்
கதிர்.
அதன் வெளிச்சம் பட்டு
மறுபடி துளிர்க்கும்
இலை
இலையும் கதிரும்
இருப்பது வேறிடம்
ஒன்றில் ஒன்று
கலக்க மறுப்பின்
காலம் கற்றுக்கொடுக்கும்
பாடம்....
கதிருக்கல்ல
இலைக்கு
Posted by Unknown at 0 comments
Labels: மகேந்திரன்.பெ
மறுவீடு
மணலில்
தன் சிறகை குளிப்பாட்டும்
சிட்டுக்குருவி
தலையும் உடலையும் விட
மிகநீள வால்கொண்ட
பல வண்ணப் பறவை
அதிகாலை நேரம்துயில் எழுப்பும்
மயிலின் அகவு
மடிகணக்க பால் தரும்
பசு
இரவுகளின் இடையே
இம்சிக்கும் தவளைகள்
புல்லின் நுனியில் சிறகசைக்கும்
சிறுதட்டான்
தன் சுற்றம் தவிற
எதையும்விரும்பாத
நாய்க்குட்டி
மழையில்
நனைந்தவாரே குளிக்கும்
சின்ன மீன்கொத்தி
என எல்லாம் இருக்கிறது
என் சுயத்தை தவிர.
Posted by Unknown at 1 comments
தமிழ் மகளுக்கு கமல்
தமிழ் மகளுக்கு
தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்
காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்
ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்
சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்
புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்
Posted by Unknown at 2 comments
Labels: கமல்ஹாசன்
தியும் தீயும்
அடி ஆத்தி
அங்கே பார் பெரும் தீ
உள்ளே யார் அது உன் சக்களத்தி?
இல்லை அவள் என் ஓரகத்தி
அதற்க்கேன் கூச்சல் கத்தி
அதுதானே இப்போது மதி
இல்லாவிட்டால் மாறிவிடும் என் விதி
சொல்வார்கள் இது என் சதி
அப்புறம் என் கதி?
யாரும் வருவதற்குள் அணையாதே தீ?
அவள் பிழைத்துக்கொண்டால் என்கதி
அதோகதி.....!
Posted by Unknown at 3 comments
Labels: மகேந்திரன்.பெ
லாதாவின் கவிதைகள்
எதிர்பாராதபொழுது
பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும்
உன் துடிப்பில்எத்தனை யுகங்கள்
உயிர்த்திருந்தேன்
சிலிர்க்கும் புயலாய்உன் வேகம்
என் கணங்களைஅர்த்தப்படுத்தின
அன்று இரவு கண்ணாமூச்சி
விளையாடிக் கொண்டிருந்தபோதா
உன் கால்கள் வளர்ந்தன?
நீ பொறுக்கி வந்த உடைந்த பொருட்களும்
தெருச் சண்டைகளும்
இன்னமும்ஒட்டப்படாமல் கிடக்கின்றன
உனக்கும் நிலவுக்கும் உருட்டி வைத்துள்ள
சோற்று உருண்டைகளை
என்ன செய்யட்டும்?
அணுசக்தி
கடைந்த பாலில்மிதக்கும் வெண்ணெய்
சுழற்றச் சுழற்றத்திரண்டெழும்
தொட்டும்தொடாமலும்ஒரு சிறு நரம்போடும்
நுண்ணிய வாசம் கிளர்ந்தெழஉயிர் ஊறும்
ஒன்றாய் பத்தாய் ஆயிரம் ஆயிரமாய்
அணுக்கள் பெருகப் பெருக
எங்கும் பால் மணக்கும்
வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே?
தெருவெங்கும் ஓடிதிசையெங்கும் கூவி
இறக்கை விரிக்கும் உலகம்
எல்லாம்எல்லோரும்வண்ணத்துப் பூச்சிகள்
எத்தனை கோடி இன்பம்!
அணுவைத் துளைக்கத்தாங்குமா
என் சிறு பூ?
ஒரு நொடியில்மூச்சடைத்து
வீழ்ந்து மரிக்கும்கரப்பான் பூச்சி
திணைப்புலன்
தீக்கிளறும் உராய்வுகளைக்கவனத்தோடு
தவிர்த்தபடிதெருச் சுவரில் அமர்ந்தோம்
வழமைபோல் அன்றும்வழிபாடு
எங்கள் முகங்களைக் கீறியிருந்தது
பாவத்தின் பிறப்பாகிய நீக்களே
பூமியின் பாரம் தாங்க வேண்டும்
வேதங்கள் வேறு என்றாலும்சாரம் ஒன்றுதான்.
தெருவை மறைத்த புகை மூட்டத்தில்
மறுபுறம் இருந்தவள் உரத்துப் பாடினாள்
தளதளத்திருந்தது வயல்சப்பாத்துக் காலுடன்
அவர்கள்வயல் அழிந்தது நிலமும் அழிந்தது
முகம் சிவந்து தெரு பதுங்கநாங்கள் கிளம்பினோம்
பனிக்காலத் தோற்றமெனநகரை நிறைத்த
நுரைப் பஞ்சுகளும்சாலை மரங்களின்
வண்ண மின் பூக்களும்காற்றைச் சூடேற்றின
நகரம் உறங்கிய பின்உலாக் கிளம்புவது
தேவதைகளா? சைத்தான்களா?
என்றபடி எதிரில் இவன்
அன்றைக்குத் தீ மூட்டசிக்கிமுக்கிக்
கல் தேடும் இவனிடம்இனியும் தோற்பதற்கில்லை
இரவுக்குள் ஒளிந்திருந்த
அவள் கண்களைத் தேடி எடுத்தேன்
'எந்தப் போருமே
முடிவற்ற போர்களையே தொடங்கி வைக்கிறது'
அவள் பனி மூட்டினாள்காலம் கலைக்காத தடங்களை
அதில் எரித்தாள்யுகங்களாய்நடந்த களைப்பில்
நொந்த பாதங்களைத் தன்கூந்தலால் நீவினாள்
ஊரடங்கு உடைத்துப் புறப்பட்டோம்
நிழலில் கட்டுண்டிருந்த வீடுகளை
அவிழ்த்துவிட்டபடியே நடந்தோம்
இரவுகள் பல கடந்துவந்தது அவள் வீடு.
சுவர்கள் அற்ற அதனுள்ளேஅறைகளும் இல்லை
காற்று இழைக்கும் அரங்கில்ஆடலாம் வா
காற்சிலம்பு களைந்து நாங்கள்வான்வெளி
இறங்கவிடிந்தது பொழுது.
லதா சிங்கப்பூரில் வாழும் தமிழ்க் கவிஞர். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு
'பாம்புக் காட்டில் ஒரு தாழை' யிலிருந்து
Posted by Unknown at 1 comments
ஆலியோடு தூங்கும் தனிமை
ஆலியோடு தூங்கும் தனிமை
சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்தண்ணீர்த்
திவலை மிதித்துபடியேறும் தனிமை
மெழுகுத் திரி வெளிச்சத்தினடியில்
கருமையாய்த் தேங்கி நிற்கிறது
பின் என்னோடு நடந்தபடி என்ன
பேசுவதெனத் தெரியாமல் தயங்குகிறது
தேனீர் தயாரிக்கையில்
' எனக்கு ' எனக் கேட்கக் கூடாதா
அது என்றும் தேனீர் அருந்துவதேயில்லை
பூக்கள் மிதக்கும் தாழியில்
தாமரை மகரந்தத் தலத்தில்
தலை சாய்க்கிறது
ஆலிக்குட்டியின் மூச்சருகே போய்
தூங்கிவிட்டதா எனத் தொட்டுப் பார்க்கிறது
தனிமை என் நாய்க்குட்டியை
அணைத்துக்கொண்டு தூங்கப் பிரியப்படுவதை
உணரும் வேளை
கசிந்துருகும் மெழுகுச் சொட்டுகள்
கண்ணுக்குள் விழுந்து உறைந்து
உதிர்கின்றன
அதன் பிறகும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்
தனிமை என் வீட்டுக்குள் இடம்மாறி இடம்மாறிப்
படுத்துறங்குவதை.
வெறுமை
உன் படுக்கையறைக்குள்
தொங்கும் வெற்றுத் தூக்கணாங்குருவிக் கூடோ
கடைசித் துளிக்குப்
பிந்திய மதுக் கோப்பையோ
என்றேனும் சொல்லியிருக்கிறதா
என் வெறுமையை.
-ரோஸ்லீன்
ரோஸ்லீன் கவிதைகளுக்கான நன்றிகள்: தோழி.காம்
Posted by Unknown at 5 comments
தீ விரித்த திசையில்
தீ விரித்த திசையில்
வெளிச்சக் கிளை நகர்ந்து செல்கிறது
கருப்பு இலைகள் அசைந்து போய்
அதில் பதிகையில் பெருகும் நட்சத்திரங்களாய்
பூக்கள் ஊறுகின்றன
எல்லாப் பூவுக்குள்ளும் வெளிச்சம்
கனலுகிறது
உதிரும் தீப்பொறிப் பூக்கள்
மின்மினிகளாய் உருப்பெற்று
சிறகுகளால் வானத்தின்
பாதத்தையும் பூமியின்
உச்சியையும் தொடுகின்றன
இலைகளும் பூக்களும்
அற்றுப் போகுமொரு அவகாசத்தில்
அக்கிளை வேர்களின் நினைவை
அருந்துகிறது
அங்கே கசப்பாக ஓடுமொரு நதியில்
கங்கு போல் விழுந்து
கண்கள் பொங்கும்போது
சாம்பலாய்த் திறக்கிறேன் இமைகளை
-ரோஸ்லீன்
Posted by Unknown at 1 comments
எனக்குள்ளிருக்கும் காடு
அந்தியில் ஆழ் மனதிற்குள்
வடக்கு நோக்கியே அந்த
மலை படுக்கிறது
அதன் பாதத்தின் விரல்களில்
மழைக்கால மரங்கள்
அசைந்துகொண்டேயிருப்பதால்
தூக்கமேயில்லை
கால்களின் நரம்புகளாய்
காட்டுக் கொடிகள் பற்றிக் கிடப்பதை
ஓயாமல் பேசித் திரியும் எனது
நரம்புகளுக்குள் ரத்தம் பச்சை நிறமாகிப்
போனது யாருக்குமே தெரியாது
இதற்கான பிரார்த்தனையைக் கூட
முழங்கால்களுக்கிடையே சிக்கிக்
கிடக்கும் பாறையில் அமர்ந்துதான்
பேசிக்கொள்கிறேன்
பறவைகள் அந்தி உணர்வது போல்
அந்நேரம் இருள் அரும்புகையில்
புல்மேடுகளில் பனித் துளிகள்
நடுங்குகின்றன
லீலிப்பூ இடை நீரோடையில்
எதையோ தேடுகிறேன்
கரையெங்கும் கூழாங்கற்கள்
உதடுகளாய் சிதறிக் கிடக்கின்றன
அந்த உதடுகளை
அள்ளிச் சுவைத்து முத்தமிட்டுக்
குளிக்கிறேன்
தனிமையைத் தந்துவிட்டுப்
போனவனின் உதடு போல
அல்ல
அவை உறைந்த காலக் குளிர்
அவற்றில் முகம் வைத்து
மரங்களடர்ந்த மார்பில் சாய்ந்து
முத்தமிட்டவாறே தூங்க நினைக்கிறேன்
கிழக்கு நோக்கிப் படுக்கிறது
அந்த மலை
-ரோஸ்லீன்
Posted by Unknown at 1 comments
சே குவேராவுக்காக
நீ பிறந்த தேசம் வேறு
உன் மொழி வேறு-
தொழில் வேறு
உனக்கிருந்த ஆவல் வேறு
எங்கோ ஒரு தேசத்தில்
ஏழ்மை தெரியாமல்பிறந்த நீ -
எதிர்முனை ஆள்பவரின்
என்னச் சிறைகளை
தகற்த்தெறிந்தாய் வாய்ச்சொற்க்கள்
பேசாமல் உன்
தோள்பட்டைதோட்டாக்கள்
பேசிய வார்த்தைகள்
ஆயிரம்
தொழு நோயாளிகளுக்காய் -
நீ அலைந்த தென்னமெரிக்க
சாலைகளை விட உன்
கனவு மிகநீண்டிருந்தது-
உனக்கிருந்த ஆஸ்துமா கூட
உன்னை தாக்கிய போது
நோய்பட்டிருக்கும்
சுதந்திரமில்லா தேசங்கள்
தேடி சுதந்திரமாய்சுற்றிய நீ
கம்யூனிசம் என்பதன் ஒரே
அர்த்தம்
காம்ரேடு என்பதற்கு
முழு முகவரி
உன் பொலிவிய நாட்குறிப்பு
கூறுவது போல் ஒரு
முடிவற்ற பயணி நீ
உனக்குள் இருந்த போராளி
விழித்த போது உடன் விழித்த
தேசங்களை எண்ண விரல்கள்
போதாது.
நீ பயணம் செய்த பாதைகளில்
இருப்பவை வரலாற்று மைல் கற்கள்.
பிறந்த தேசம் வேறெனினும்
நீபோராடிய நாடு உனக்கு பதவி
தந்தது எல்லாம் தந்தது நீ
தேடிய ஒன்றை தவிற
உலக விடுதலை
காங்கோ காடுகளுக்கும்
உனைதுளைத்த அந்த
கள்ள தோட்டாவுக்கும்
வாயிருந்தால் சொல்லும்
அது பெற்ற
பெறும் பேற்றை.
-மகேந்திரன்.பெ
Posted by Unknown at 3 comments
Labels: மகேந்திரன்.பெ
தலைப்பு வையுங்கள்
இரவுகளில் விழித்திருக்கும்
உனக்கு எப்போதேனும்
என் ஞாபகம் வருவதுண்டா?
சில காத தூர பயணங்களில்
உன் கண்களிடம் இருந்து
விடுபட முடியாது
கண்ணீருடன் நான் செல்லும்
வழிப்பாதை நோக்கியபடி
அமர்ந்திருக்கும் உனைக் கண்டால்
எனக்கு இப்போதும் சிரிப்புத்தான்
வருகிறது நீயும் நானும்
வேறு வேறு பாதையில் பயனித்த போதும்
ஒருமுறை கூட
பாதை தவறியதில்லை
சில நேரங்கள் நமக்குள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்த
முடியாது விழிகளுள் மட்டும்
பேசிக்கொள்வோம்
யாருக்கும் தெரியாமல்
அது
விடியும் வரை என்றால் கூட
என் எண்ணங்களோடு
நீ மாறுபட்டாலும் என்னோடு
எப்போதுமில்லை
உன் சின்ன விழியில்
எப்போதும் தெரியும்
சந்தோஷம் என்னை பார்த்ததால்
என்று நான் தப்பாகவே
இப்போதும் நினைக்கிறேன்
உனை மறுமுறை பார்த்தால்
கட்டிக்கொண்டு அழுவேனா
தெரியாது
நிச்சயமாய் பேச்சுவராது
-மகேந்திரன்.பெ
Posted by Unknown at 0 comments
Labels: மகேந்திரன்.பெ
நன்றியுள்ள உனக்கு
தினசரி காலையில்
எழுந்திருக்கும் வேளைகளில்
காலை சுற்றி வந்து வட்டமிடும்
உன் கண்களில் தெரிவது
பசிமட்டுமா? இல்லை
அது இன்னோர் சுகானுபவம்
காலில் கிடப்பதை கழட்டி
அடித்துதுரத்திவிடலாம் என்றே
சில
கோபமான தருனங்களில்
எண்ணுவதுண்டு
நீ மறுமுறை என் கால்தொட்டு
நுகருகையில் உன்
கண்கள் கேட்கும் கேள்விகளுக்கு
என் வார்த்தைகளால் பதில்சொல்ல
இயலாது போகுமே
அதுஎண்ணி சில நேரம்
நானும் பொருத்துப்போவதுண்டு
உன் சங்கடமான சில சந்தோஷங்கள்
என் கல்லடி பட்டு காயமாகி இருக்கும்
உனக்கு நல்ல வேளையாக
ஞாபகசக்தி அதிகமில்லை
ஆனால்
உனை வேறு யாரும்
கல்லெரிந்து விட்டால்
உனக்கு பதிலாய் நானே
அவர்களை கடித்து
குதறிவிடலாமா என்றிறுக்கும்.
சில மனிதத் தோல் போர்த்தி
உன் வேடமிட்டு வருபவர்கள்
நல்ல வேளையாக
எனை அதிகம்
நெருங்க வில்லை
ஒருவேளை அவர்கள்
உண்மையிலேயே
உன் இனமாய் இருக்கக் கூடும்
இப்படிக்கு.....
நன்றியுடன் நானே.
Posted by Unknown at 0 comments
Labels: மகேந்திரன்.பெ
யாழினி கவிதைகள்
எத்தனை புரண்டாலும்
உடலில் ஒட்டாத கடல் மண்போலவே இருக்கிறது
எனக்கும் இந்தநகரத்துக்குமான உறவு.
நினைவு தெரிந்த நாள்முதலாய்
தன் அளவுக்கு மீறியவளர்ச்சியை
என் மீதுதிணித்துக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.என் விருப்பங்களையும்
மீறிஎன் வாழ்க்கையைநிர்ணயிக்கின்றன
இந்த நகரத்தின்இயந்திரத்தனங்கள்.
எவ்வளவோ முயன்றும்
எந்தபுனித நதியிலும் கரைக்கமுடிவதில்லை
சதா என்மீதுஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த நகரத்து எச்சங்களை
மிக இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கிறது
இந்தஉரையாடல்.
வழக்கமான அன்புப்பரிமாறல்களுக்கடியில்
திரை போட்டு உட்கார்ந்துகொண்டிருக்கின்றன,
கொஞ்சம் பிரிவுத் துயரும்
சில கண்ணீர்த் துளிகளும்.
நாளை இந்த நேரம் இருக்கப்போவதில்லை
இது எதுவும்.நீ இல்லாத
இந்தக் காலத்தில்எது வேண்டுமானாலும்
நடக்கலாம்.நீ விலகியிருக்கும்
தூரத்துக்குஏற்பதனிமையில்
சுமை கூடிஎன்னை அழுத்திசிதைக்கலாம்.
நீயற்ற தைரியத்தில் கால்முளைத்து
நடமாடலாம்
புதைக்கப்பட்டிருக்கும்
எனதுசில பயங்கள்.
எனக்கு நானே ஒரு
கல்லறையை
வடிவமைத்துக்கொண்டிருக்கலாம்.
இது எதுவுமே நடக்காமலும்
போகலாம்.
Posted by Unknown at 0 comments
கனிமொழி கவிதைகள்
மூடிய விழிகளைத் தாண்டி
துளைக்கின்றது குத்திட்ட பார்வை
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
புன்னகை.சொல்லொணாப்
பதற்றங்கள்நிறைக்கின்றன என்னை.
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
குருதியில் தோய்த்த
கத்திகளைகருத்த உதிரத்தின் நெடியோடு.
குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும்நிறைந்த அறைக்கு
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பதுஉன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடுநடந்த
சாலைகளை.
ஓய்ந்து விரிந்த இரவுகளில்கனவாய்
வேண்டுதலாய் யாசித்துசிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம்சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்துபேழைகள்
திறக்கின்றனபேய்களும்
தேவதைகளும்ஒருங்கே
அலையும்காடுகளில் முகையும்பூக்களின்
மணம்திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித்துவளும்
கரங்கள்.
-கனிமொழி
விழி நிறையவிடியும் என்ற
கனவுகளோடு காத்திருக்கிறோம்.
வழி நெடுகிலும் நட்சத்திரங்களின்
அணிவகுப்பு.
தங்கத் தாரகைகள், புதிய சூரியன்கள்
புயல்கள், காட்டாறுகள்,சிகரங்கள்,
மாவீரர்கள்,அறிவுஜீவிகள், அறிஞர்கள்.
வாய் பிளந்து நிற்கிறோம்.
பொங்கிப் பிரவாகமாகும் நெகிழ்ச்சியோடு
சிலிர்த்து,உச்சம் தொடும் உணர்வோடு,
வெடித்து வானம் கிழிக்கும்வாத்தியங்களோடுகாய்ந்து
சிறுத்த நாபிகள்கிழித்துச்
சிதறும் வாழ்த்தொலிகள்
.குளிர்ப் பொய்கையைப்போல்.
குழந்தையின் மென்ஸ்பரிசம்போல்,
மகரந்தம் சுமக்கும் தென்றலைப்போல்
மெல்லிய பட்டின் இழைகளைப்போல்,
எங்களை உயிர்வரை
தழுவிச் செல்கிறதுஅவர்களின்
ஆகர்ஷம் மிகு பார்வைகள்.
உயிர்ப் பூக்கள் சிலிர்த்து
எழுந்துசுவாசப்பைகளை அடைக்கின்றன
.காதலும் காமமும் தொடாத
சிகரங்களில் உறைகிறது காலம்.
நேர்த்தி மிகுந்த விளிப்புகள்,
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள்,
எனக்கே எனக்கேயானதாகிறது.
எனது செவிகளை, புலன்களைசெயல்களை
வருடி நிறைக்கிறது.
இனி என் வித்துக்கள்
உனது நிலங்களில்மட்டுமே
விதைக்கப்படும்.
நடுநிசிக் களவில் உயிர்க்கும்
முகமற்று நொதிக்கும் வாழ்வு.
விடிந்தபின் விரியும்கள்ளிப்
பாலையின் வெடித்த நிலங்கள்.
புழுதிக் காற்றில் அலையும்காய்ந்த
விந்துகள்வண்புணர்வில்
புழை கிழிந்துகதறும் சிறுமியைப்போல்
மருண்டு அழுகிறேன்
இருண்மையின் இருள்
சூழ்ந்த பகல்பொழுதுகளில்உனது
வித்துக்கள் எப்போதும்
வேலிகளைத் தாண்டுவதே இல்லை.
-கனிமொழி
Posted by Unknown at 3 comments
Labels: கனிமொழி
‘‘லவ் பண்ணுடா மவனே... லவ் பண்ணுடா!
சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப்
பிறகுமீண்டும் உனக்கொரு
காதல் கடிதம்
.உன் விலாசம் எப்படியும்
மாறும்என்ற காரணத்தினாலோ
என்னவோஉனது
விலாசத்தை காதலி
என்பதோடுஅன்று
விஸ்தீரணம் செய்யாது
விட்டுவிட்டேன்.
காதலி...
மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய
கடிதம்உனக்கல்ல எனினும்
இத்துடன்அதையும்
இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம்
பார்ப்பதுஅனாசாரமாகாது
. பார்த்துப் புரிந்துகொள்.
பழைய கடிதத்தின்
சொந்தக்காரியிடம்இந்தக்
கடிதத்தைக் காண்பிக்க
வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க
வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை
. ஆள் மாறினாலும்இல்லாள்
மாறினாலும் காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும்
காதலில் கூடுவதும்இருவேறு
நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன்
எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும்
மிருகத்தனம்மனிதனுக்கே
உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று
. பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான
மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம்
குறைந்து வருவதை
உணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என்
(நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம்
பூண்டவர்கள்சமிக்ஞை
செய்துகவிதையை
வைக்கிறார்கள்.
நான் காதலன்
கவிஞன்ஆதலால்
காதலால்
மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும்
விலாசமில்லாமல் விட்டிருப்பதுவிபத்தல்லநீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய்
நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
Posted by Unknown at 0 comments
Labels: கமல்ஹாசன்
திருப்பித்தா
நீ யாரென்று
எனக்கு தெரியாது
உன் பெயர் என்ன வயதென்ன
உன் குரலோசை
எதுவும் எனக்கு தெரியாது
உன்னை இரண்டு நிமிடத்துக்கு
மேல்
நான் பார்க்கவில்லை
உன் முகவரி தந்தை பெயர்
எதுவும் அறியேன்
உனை பார்த்த
அந்த நிமிடம் கூட
நினைவில்லை
பேருந்தின்
சன்னல் ஒரமிருந்து எனை
பார்த்து புன்னகைத்த
நீ
மீண்டும் ஏதேனும்
ஒரு கணத்தில் எனை
சந்திக்க நேர்ந்தால்
திருப்பித்தா
உன் விழிமேல்
ஒட்டிக்கொண்ட என்
பார்வையை
Posted by Unknown at 0 comments
Labels: மகேந்திரன்.பெ
பழைய காதலிக்கு
உன்
ஒற்றை வார்த்தையில்
எனைவிட்டுப்
பிரிவதாக கூறி
என் மனத்தை
ரணமாக்கினாய்;
சில தருணங்களில்
நாமிருந்த கணங்களை
மறந்துபோனதாக
கூறி என்
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்
உன் கண்ணில்
என் இரட்டை இதழ்கள்
பதித்தசத்தமில்லா
முத்தத்தை -
நெற்றி வகிட்டில்
நித்தம் ஓடிய என்
சுட்டு விரல் தடத்தை
உன் எடுப்பான நாசி
மேல் தினம் மேய்ந்த
என் கருத்த மீசை
மதற்த்த உன் மார்பில்
பதித்த என்
நகக்குறிகளை
இப்படி எதை
வேண்டுமானாலும்உன்னால்
மறக்க முடியும்
என்னை?
Posted by Unknown at 1 comments
Labels: மகேந்திரன்.பெ
ஒரு புறநாற்று புதுக் கவிதை:
ஒரு புறநாற்று புதுக் கவிதை:
என்னால்
உன்னை
தூக்க முடியவில்லை
உன் மார்பு நல்ல அகலம்
நீ கிடக்கும்
நிலையை பார்த்து
அய்யோ என்று
சத்தமிட்டால்
புலி வந்துவிடுமோ
என்றுபயமாய் இருக்கிறது
உன்னை இப்படி செய்த
விதியும் என்னைப்போல்
அல்லல் படட்டும்
என் வளைக்கரத்தை
பற்றிக்கொள் அந்த
மலை நிழல் வரை
போய்விடலாம்மெல்ல நடந்து
நன்றி: சுஜாதா
Posted by Unknown at 5 comments
உன் பெயர்
என்னோடு இருக்கும் நீ..
நீ எப்போது
என் வீட்டுக்கு வந்தாலும்
மழையை கூடவே கூட்டிக்கொண்டு
வருவதாக
அம்மா சலித்துக்கொள்வாள்
உன்னை பார்ப்பதற்கு
அலைவதாலேயே
மதிய சாப்பாடு
இல்லாமல் மெலிந்துபோனதாக
அக்கா கிண்டுவாள்
என் இரவுகள்
அத்தனையும் உன்
கனவு வருகைகளால்
தொலைந்தன
நீ அருகில் இருக்கும்
போதுதான்
எனக்கு தடுமன் பிடிக்கிறது
உன்சிற்றிடை தழுவும்
சூட்டில் என்
சிறுவயது ஞாபகம்
விழித்துக் கொல்(ள்)கிறது.
இப்போதும்
மழையில்லை
குளிரில்லை
ஆனாலும்
தடுமன்
காரணம்
சில்லிட சுவாசிக்கும்
உன் பெயர்
Posted by Unknown at 0 comments
Labels: மகேந்திரன்.பெ
அனுப்பாத கடிதங்கள்
அனுப்பாத கடிதங்கள்
இதுவரை
சொல்லிக்கொண்டதில்லை
இருவரும்..
ஆனால்
அது நம் இரண்டுபேரைத் தவிர ;
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது
உன்னை தவிர வேறெதையும்
கண்டிராத என்
கண்களுக்குஉன்
கண்களில் இருந்த
காதல்மட்டும் தெரியாமல்
போனதெப்படி?
விழித்தெழுந்தால் வேண்டுமென்று
திருடிவந்த
உன் பேருந்து அட்டை
புகைப்படம்
கருப்பு வெள்ளையாய்
இன்னும் இருக்கிறது.
என்னிடம்...
ஒரு மங்கிய மாலை
பொழுதில்ஆற்று மணலில்
நீ தந்த அச்சிட்ட
பிறந்த நாள் வாழ்த்தும்..
அதன் பின்னொருநாள் நீ
படிக்கத்தந்த தபூ
சங்கரின் முத்தத்தை கேட்டால்
என்ன தருவாய்
புத்தகமும்
அத்துடன் இணைப்பாய் தந்த,
நான் புகைபிடிப்பதை
உனக்கு காட்டிக்கொடுத்த
முத்தமும்...
இன்னும் இருக்கிறது
என்னிடம்.
ஐந்தாண்டுகாலம்
அழிந்தது தெரியாமல்
அணைத்தபடியே
இருந்த சிலஇரவு
நேரங்களின்
திருவிழாநாட்களும்..
என்னிடம் சொல்ல மறந்த
உன்னைபோல்உன்னிடம்
சொல்ல மறந்த என்னையும்
இருவரும் வேதனித்துபார்த்த போது
காலம் வெகுதூரம்
சென்றிறுந்தது
இன்று உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவும் இல்லை.
இந்த கவிதை அந்திமழை இணையத்தில் வந்திருந்தது என் கவிதைகளை ஒரே இடத்தில் திரட்டும் பொருட்டு மீண்டும் பதியப்பட்டது.
Posted by Unknown at 2 comments
Labels: மகேந்திரன்.பெ