‘‘லவ் பண்ணுடா மவனே... லவ் பண்ணுடா!


சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப்
பிறகுமீண்டும் உனக்கொரு
காதல் கடிதம்
.உன் விலாசம் எப்படியும்
மாறும்என்ற காரணத்தினாலோ
என்னவோஉனது
விலாசத்தை காதலி
என்பதோடுஅன்று
விஸ்தீரணம் செய்யாது
விட்டுவிட்டேன்.
காதலி...

மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய

கடிதம்உனக்கல்ல எனினும்
இத்துடன்அதையும்
இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம்

பார்ப்பதுஅனாசாரமாகாது
. பார்த்துப் புரிந்துகொள்.
பழைய கடிதத்தின்
சொந்தக்காரியிடம்இந்தக்
கடிதத்தைக் காண்பிக்க
வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க
வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை

. ஆள் மாறினாலும்இல்லாள்
மாறினாலும் காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும்

காதலில் கூடுவதும்இருவேறு
நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன்
எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும்
மிருகத்தனம்மனிதனுக்கே
உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று

. பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான
மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம்
குறைந்து வருவதை
உணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என்

(நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம்

பூண்டவர்கள்சமிக்ஞை
செய்துகவிதையை
வைக்கிறார்கள்.
நான் காதலன்

கவிஞன்ஆதலால்
காதலால்
மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும்

விலாசமில்லாமல் விட்டிருப்பதுவிபத்தல்லநீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய்
நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!

0 comments: