உன் பெயர்



என்னோடு இருக்கும் நீ..
நீ எப்போது
என் வீட்டுக்கு வந்தாலும்
மழையை கூடவே கூட்டிக்கொண்டு
வருவதாக
அம்மா சலித்துக்கொள்வாள்
உன்னை பார்ப்பதற்கு
அலைவதாலேயே
மதிய சாப்பாடு
இல்லாமல் மெலிந்துபோனதாக
அக்கா கிண்டுவாள்
என் இரவுகள்
அத்தனையும் உன்
கனவு வருகைகளால்
தொலைந்தன
நீ அருகில் இருக்கும்
போதுதான்
எனக்கு தடுமன் பிடிக்கிறது
உன்சிற்றிடை தழுவும்
சூட்டில் என்
சிறுவயது ஞாபகம்
விழித்துக் கொல்(ள்)கிறது.
இப்போதும்
மழையில்லை
குளிரில்லை
ஆனாலும்
தடுமன்
காரணம்
சில்லிட சுவாசிக்கும்
உன் பெயர்

0 comments: