பழைய காதலிக்கு


உன்
ஒற்றை வார்த்தையில்
எனைவிட்டுப்
பிரிவதாக கூறி
என் மனத்தை
ரணமாக்கினாய்;
சில தருணங்களில்
நாமிருந்த கணங்களை
மறந்துபோனதாக
கூறி என்
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்
உன் கண்ணில்
என் இரட்டை இதழ்கள்
பதித்தசத்தமில்லா
முத்தத்தை -
நெற்றி வகிட்டில்
நித்தம் ஓடிய என்
சுட்டு விரல் தடத்தை
உன் எடுப்பான நாசி
மேல் தினம் மேய்ந்த
என் கருத்த மீசை
மதற்த்த உன் மார்பில்
பதித்த என்
நகக்குறிகளை
இப்படி எதை
வேண்டுமானாலும்உன்னால்
மறக்க முடியும்
என்னை?