திருப்பித்தா



நீ யாரென்று
எனக்கு தெரியாது
உன் பெயர் என்ன வயதென்ன
உன் குரலோசை
எதுவும் எனக்கு தெரியாது
உன்னை இரண்டு நிமிடத்துக்கு

மேல்
நான் பார்க்கவில்லை
உன் முகவரி தந்தை பெயர்
எதுவும் அறியேன்
உனை பார்த்த

அந்த நிமிடம் கூட
நினைவில்லை
பேருந்தின்

சன்னல் ஒரமிருந்து எனை
பார்த்து புன்னகைத்த
நீ

மீண்டும் ஏதேனும்
ஒரு கணத்தில் எனை
சந்திக்க நேர்ந்தால்
திருப்பித்தா
உன் விழிமேல்

ஒட்டிக்கொண்ட என்
பார்வையை

0 comments: