இரங்கற்பா
கருகிய அந்தமுகத்துக்கு
தெரியாது நான்
யாரென்று
கருகும் முன் நான்
பார்த்திருந்தாலும் அது
தெரிந்துகொண்டிருக்காது
என் எல்லா நாட்களைப் போல
இதுவும் ஒரு நாள்
இங்கே நான் எழுதுவது "அதைப்"பற்றி
என்றும் அறியாது
அதுவும் இதற்க்காகவே காத்திருக்கக் கூடும்
என்னைப் போல
என்றாவது ஒரு நாள்
எனக்கும் வரும்வேளை
அப்போது வேறு யாராவது
எழுதக்கடவது இதேபோல்
கருகிய சவக்களை வீசும்
என் முகத்தைபார்த்து
1 comments:
நல்ல கவிதை!
Post a Comment