கோடைத்துயில்


பருவங்களென எப்பொழுதும்
உனது நிகழ்வுகளை

பெய்தும் பொய்த்தும்
பூத்தும் காய்ந்தும்
உறைந்தும் தழுவியும்

எனது உடம்பு
தளும்பியும் நுரைத்தும்
பாய்த்தும் தேங்கியும்
வறண்டும்

எல்லாக் கோடையிலும்
உனது வரவை எதிர்நோக்கி
என் உடம்பில்
முட்டைகளையும் விதைகளையும்
பாதுகாத்தபடி

வசந்தத்தின் முதல் மழைக்கே
மண் நனைந்து
முலைகள் மொட்டவிழந்து விடுகின்றன
மீன் குஞ்சுகள்
உடம்பில் உள்நிரம்பி மொய்க்கின்றன

- மாலதி மைத்ரி

1 comments:

Anonymous said...

மகி! வந்த உடனே கவுஜயா, நடத்துங்க!!

அபிஅப்பா