COCKtail தேவதை!


பிறகொரு நாளின் நள்ளிரவில்
கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்
குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்
தேவதையின் யோனியில்
வார்த்தைகள் வழிந்தன.

பரவசத்தின் உச்சத்தில்,
ஆயிரத்தி ஒன்றாம் முறையாய்
கட்டவிழ்த்தலின் சூட்சுமத்தை
காது மடல்களில் ஆண்டனி கிசுகிசுத்தான்.

“விந்து பீச்சட்டும்.
ஆங்கே கமிசார்களை கட்டவிழ்.
யோனி விரியட்டும்.
ஒருங்கே புரட்சியைப் புரட்டு.
மயக்கம் வரப் புணர்.
மார்க்சிய சொல்லாடல் மிக முக்கியம்.
COCKtail-ஆக கலந்து வை.
ஃபூக்கோவின் லேபிளை ஒட்டி விடு.
பிரதியின் சூட்டில்
இலக்கியம் விரைக்கும்.
மெக்கார்த்தி புன்னகைப்பான்.
மாலை விருந்திற்காக கண்ணடிப்பான்.
மீண்டும் வரலாறு முடிவுக்கு வந்திருக்கும்.

புருவத்தை சரி செய்.
புகைப்படமாக எடுத்து வை.
உன்னைச் சுற்றி
இயங்குகிறது உலகம்.
உன்னைச் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உன்னைத் தான் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.

உலகின்
அழகிய,
அழகில்லாத,
அழகாய் இருக்க முடியாத,
அழகாய் இருக்க வக்கில்லாத,
அழகாய்ப் பிறக்காத.
அழகாய்ப் பிறக்க முடியாத,
அனைத்துப் பெண்களின் விடுதலையும்,
நீ கட்டவிழ்க்கும் கவிதைகளுக்காகத்தான்
காத்துக் கிடக்கிறது என்பதை அறிவித்து விடு.
கிளாரா ஜெட்கினை விஞ்சிய
பெண் விடுதலைப் போராளியே!
என போஸ்டர் அடிக்க காசு கொடு.
மர்லின் மன்றோ பாவாடையில்
அதனை ஒட்டச் சொல்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
மிஞ்சிப் போனால்
எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
“ஏன் கொச்சை வார்த்தைகள்?”
“நீங்களா இப்படி?”

சட்டம் சட்டம்தான்,
முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
கண்டபடி பேசக் கூடாது.
கண்ணியமாக துடைத்து விட்டு,
கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.

மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
வேண்டும் போது விரிக்கலாம்.
வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
தேவதைகளின் சிறுநீர்,
கவிதை.
கம்யூனிஸ்டுகளின் கோபம்,
கொலைக் குற்றம்.

எனவே,
மார்பைக் குலுக்கு.
மயிரை பிய்த்துப் போடு.
போதை கிறக்கத்தில்
COCKtail-ஐ மட்டும் மாற்றி விடாதே…
கட்டவிழ்த்தலுக்கும்
விதிமுறைகள் உண்டு.
பாரத மாதா,
இந்து ராஷ்டிரம்,
பாபர் மசூதி
என எதையும் சேர்த்து விடாதே.
சரஸ்வதியாக சந்தில் நிறுத்தி விடுவார்கள்.”

-லீனா மணிமேகலை

3 comments:

said...

நண்பரே காக்டெயில் தேவதை லீனா மணிமேகலை எழுதிய கவிதை அல்ல,லீனாவின் கவிதைக்கு எதிராக வினவு குழுவினரால் எழுதப்பட்ட கவிதை,அதனால் அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.