மணல் !! தசாவதாரக் கவிதை


‘மணல்
கூழாங்கற்களின்
குழந்தை--!

நீங்கள்
மண்ணை வெட்டுவது
எங்கள் மழலையை
வெட்டுவதற்குச் சமம்-!

அடுத்தவனுக்குப்
பள்ளம் தோண்டியே
அடையாளப்பட்டவனே...
எங்கள்
மண்ணையும் தோண்டிப்
பூமியை புதைத்துவிடாதே!

சோறு போடும்
நிலத்தைக்
கூறு போடும் நீ
விந்துக்குப் பிறந்தவனா?
சிறுநீருக்குப் பிறந்தவனா?

மணல் தரையை
நீங்கள்
மாமிசமாய் அறுத்துத் தின்றால்
எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்
எங்கே
பாண்டி ஆடுவது?

எங்கள் மழலைகள் எங்கே
மணல் வீடு கட்டுவது?

கோவண மனிதர்கள்
எங்கே
கொல்லைக்குப் போவது?

நாங்கள்
ஒத்தையடிப்பாதையில்
எப்படி
ஊர் போய்ச் சேருவது?

வேரறுந்த மரத்தின் கீழ்
எப்படி
வெயில் இளைப்பாறுவது?

அகதியாய்ப் போன
பறவைகளை
யார் அழைப்பது?

உங்கள்
சிகரெட் புகையில்
மழை வரும்
என்பதற்காக
எங்கள்
தாகத்தைத்
தள்ளிப்போட முடியாது!

திருட்டுத்தொழிலை விட்டுவிடு
திருடிய மண்ணைக்
கொட்டி விடு!

இனிமேல் திருட நினைத்தால்...
இவனைஇரண்டு துண்டாய்
வெட்டிவிடு!’

-கபிலன் தசாவதாரம் படத்தில்

0 comments: