அருவருப்பான கவிதை!


யோனி
தின்பண்டத்தைக்
கணவன் கடித்துண்ணுவதற்குப் பதிலாக
அரிந்துண்ணலாம்
எவருக்கும் அவனாக உண்ணக்கொடுத்தும்
களிப்புறலாம்
முலைகளோ பண்டமன்று
கண்ணாடிக்குடுவையில் நிரம்பி வழியும்
மதுபானம்
விதவிதமான மதுபானங்கள் நுரையோடு வழிவதைப்
பருகாத இரவுகளில் கனவுகள் வருவதில்லை.
உடலோ ஒரு வெள்ளைக் காகிதம்
உறங்கிய பின்போ
வாங்கிய கனவிலோ சொல்லின் கீறலோ
துளியும் சிந்திவிட்டால்
கற்பின் கிரீடத்தில் ஒளி மங்கும்
அயல்நாட்டிலிருந்து திரும்பும் கப்பலாய்
வழி மாறிக் கடலில் திரியும்
காலை முதல் இரவு வரை
இடத்தைப் பொறுத்து முத்தம் விலை என்றாலும்
யோனி தின்பண்டமன்று

-குட்டி ரேவதி

0 comments: